Browse and Search Thirukkural
Welcome to TamilCube’s Thirukkural Search and Browse. Here, you can search Thirukkural couplets and the Tamil and English commentaries in English or Tamil. You can browse all the Thirukkural couplets chapterwise as well.
Kural 266
தவம்
Penance
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
Thavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar / Rallaar Avanjeyvaar Aasaiyut Pattu
English
Who do penance achieve their aim Others desire-rid themselves harm
— Who works of 'penance' do, their end attain,Others in passion's net enshared, toil but in vain
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.
அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்
Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure)